கேரளாவில் ஏற்கனவே 2 பெண்கள் நரபலி கொடுத்தாக கூறப்படும் இந்த நிலையில், மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்பவர், லாட்டரி விற்று வந்தார். இவரைப் போலவே, காலடியை சேர்ந்த ரோஸ்லின் என்பவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர் ஒருவர் இருவரையும் அழைத்துச் சென்றார். ஆனால், பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் லைலா-பகவந்த் சிங் தம்பதியினர், இவர்கள் இருவரையும் விரைவில் பணக்காரர்களாக மாற்றும் நோக்கில் நரபலி கொடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை கண்டுபிடித்த கேரள காவல்துறையினர், நரபலி கொடுத்த தம்பதி மற்றும் இடைத் தரகர் ஆகிய மூவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில் நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடலை வெட்டி சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் இவ்வாறு காணாமல் சென்றுள்ளதால், அவர்களும் இவ்வாறு நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 87 வயதில் முதல் நிலவுப் பயணம்: சாதனைக்கு வயது ஒரு தடையல்ல..!