Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆட்டத்தை மாற்றிய 'அந்த ஒரு கேட்ச்': இலங்கையின் வெற்றி பறிபோனது எப்படி தெரியுமா?

    ஆட்டத்தை மாற்றிய ‘அந்த ஒரு கேட்ச்’: இலங்கையின் வெற்றி பறிபோனது எப்படி தெரியுமா?

    நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது. 

    2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று சிட்னியில் நியூசிலாந்து – இலங்கைக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. 

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, இலங்கை பணி பந்துவீசியது. அதிரடியான தொடக்கம் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரில் ஃபின் ஆலனை 1 ரன்னில் போல்ட் செய்தார் இலங்கையின் பந்துவீச்சாளர், தீக்ஷனா. பிறகு கான்வே 1 ரன்னிலும், வில்லியம்சன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் 4-வது ஓவரின் முடிவில் 15/3 என்கிற நிலையில் இருந்தது நியூசிலாந்து. 

    நியூசிலாந்து சரியத் தொடங்கி விட்டது போன்ற தோரனை தெரிய, டேரில் மிட்செல்லும் ,கிளென் பிலிப்ஸும் அருமையான கூட்டணியை அமைத்து நியூசிலாந்தை சரிவிலிருந்து மீட்கத் தொடங்கினர். பொறுமையாக விளையாடி வந்தவர்கள் 14-வது ஓவரில் இருந்து கியரை மாற்ற நியூசிலாந்து பக்கம் ரன்கள் வரத்தொடங்கியது. கிளென் பிலிப்ஸ் 64 பந்துகளுக்கு 104 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 

    இதையும் படிங்க: இந்தியாவில் புதிதாக இன்று 1,574 பேருக்கு உறுதியான தொற்று…

    பிலிப்ஸ் 12 ரன்களில் இருந்தபோது அவர் வழங்கிய எளிதான கேட்சை நழுவ விட்டார் நிசங்கா. இந்த கேட்சின் விலை பின்னர் சதமாக மாறியது. மொத்தத்தில், 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

    இதைத்தொடர்ந்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், நியூசிலாந்தின் அபார பந்துவீச்சு காரணமாக  இலங்கை அணி தொடர்ந்து தங்களது விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தன. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நிசான்கா டக் அவுட் ஆக, அடுத்து வந்த தனஞ்செயாவும் டக் அவுட் ஆனார். 

    பனுக்கா ராஜபக்சே 34 ரன்களும், தசுன் ஷனகா 35 ரன்களும் எடுத்தனர். இவர்கள் இருவரைத் தவிர அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்தனர். நியூசிலாந்தின் பந்துவீச்சு இலங்கை அணியை சரணடைய வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். 19.2 ஓவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

    இதன்மூலம், நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது. ஆட்டநாயகன் விருது 104 ரன்கள் எடுத்த கிளென் பிலிப்ஸிற்கு வழங்கப்பட்டது. 

    இதையும் படிங்க: சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை! புதிய அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....