Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'வலிமையானவராகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நடிகை சமந்தா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

    ‘வலிமையானவராகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை’ – நடிகை சமந்தா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

    நாம் எப்போதும் பிறரின் முன்பு வலிமையானவராகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சமந்தா தெரிவித்துள்ளார். 

    தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். 

    இவர் நடிப்பில் தற்போது ‘யசோதா’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இந்நிலையில், சமந்தா தனது சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த புகைப்படத்தில், கையில் ட்ரிப்ஸை ஏற்றிக்கொண்டு, டப்பிங் செய்தபடி இருக்கிறார் சமந்தா. 

    அந்த பதிவில், ‘யசோதா’ டிரெய்லருக்கு உங்களின் வரவேற்பு என்பது உணர்ச்சிப்பூர்வமானது. உங்களுடன் நான் பகிர்ந்துக்கொண்டிருக்கும் அன்பும், தொடர்பும்தான் சவால்களை சமாளிக்க எனக்கு சக்தியைத் தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: “அதிக பணம் சம்பாதிப்பதற்காக நிறுவனத்தை வாங்கவில்லை”: எலான் மஸ்க் விளக்கம்..!

    மேலும், சமந்தா தெரிவித்துள்ளதாவது; 

    சில மாதங்களுக்கு முன்பு நான் ‘மயோசிஸ்’ எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய்க்கு உள்ளாகியுள்ளேன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பூரண குணம் அடைந்த பிறகே உங்களிடம் இதை தெரிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், இந்த குறைபாட்டிலிருந்து குணமடைய நாட்கள் அதிகம் எடுத்துக்கொண்டிருக்கின்றன. அத்துடன், நாம் எப்போதும் பிறரின் முன்பு வலிமையானவராகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் தற்போது நான் உணர்ந்துள்ளேன். 

    என் நிலைமையை ஒப்புக்கொள்ள நானே போராடிக்கொண்டிருக்கிறேன். நான் விரைவாக குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என இரண்டுமே இருந்துள்ளன. என்னால் இதை கடக்க முடியாது என்று நினைத்தவற்றையும் எப்படியோ நான் கடந்து வந்துள்ளேன். ஆதலால், இன்னும் சில நாளில் நான் குணமடைந்துவிடுவேன். இதுவும் கடந்து போகும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    சமந்தாவின் இந்த பதிவு ரசிகர்களை உருகவைத்துள்ளது. பலரும் சமந்தாவிற்கு விரைவில் குணமடைய வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....