தில்லி பேருந்தில் இளம்பெண் ஒருவரிடம் வினோத நபர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி ரோகிணி பகுதியில் மாநகர பேருந்தில் இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அப்போது அந்தப் பேருந்தில் பெரிய அளவில் கூட்டம் இல்லாத நிலையில், அந்தப் பெண்ணின் முன் நின்றுகொண்டிருந்த ஒருவர் அப்பெண்ணிடம் தவறான செய்கை காட்டியுள்ளார்.
அந்தப் பெண்ணை நோக்கி அவர், தனது அந்தரங்க உறுப்பை காட்டி சுயஇன்பம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அங்கிருந்த மார்ஷல் சந்தீப் சகரா என்ற நபரிடம் இதனை குறிப்பால் கூறி இருக்கிறார். உடனே மார்ஷல் அந்த நபரின் மோசமான செயலை காணொளியாக எடுத்துள்ளார்.
காணொளி எடுப்பதை அறிந்த அந்த வினோத நபர், பெண்ணிடம் இதை மன்னித்து விட்டுவிடுமாறு கதறி அழுதுள்ளார். இதையும் அவர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதையடுத்து இந்தக் காணொளி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்தச் சமபவம் குறித்து தகவல் அறிந்த தில்லி காவல்துறை, அந்தப் பெண்ணிடம் புகார் அளிக்க கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், அதற்கு அந்த இளம்பெண் மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த வினோத நபர் பீகாரை சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
எங்க நாடு தமிழ்நாடு! இஷ்டம் இருந்தா இரு, இல்ல ஓடு- சீமான் பரபரப்பு பேச்சு