“எங்க நாடு தமிழ்நாடு இஷ்டம் இருந்தா இரு, இல்ல ஓடு” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின், தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்ற கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சீமான், அது ஆளுநருக்கு சரியாக இருக்கும் என்றும் சுப்ரமணியசாமி ஐயாவுக்கு சரியாக இருக்கும் என்று கூறியதோடு, பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்பு திருநெல்வேலியில் கல்வெட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் ‘எங்கள் நாடு தமிழ்நாடு. இஷ்டம் இருந்தால் இரு; இல்லையென்றால் ஓடு. அதனால் இல்லாதவற்றை பேசிக் கொண்டிருக்க கூடாது என சீமான் கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான், ஆளுநர் ஏதாவது பேச வேண்டும் என பேசிக்கொண்டு இருப்பதாகவும், அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை; நமக்கு கோடி வேலை இருப்பதாகவும் கூறினார்.
வாரிசு படத்தின் விற்பனை மட்டுமே இத்தனை கோடியா? – ரிப்போர்ட் இதோ..