Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'துணிவு' பட பாணியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் கைது

    ‘துணிவு’ பட பாணியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் கைது

    துணிவு திரைப்படம் பார்த்த இளைஞர் ஒருவர் திண்டுக்கல்லில் பட்ட பகலிலேயே வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். 

    கடந்த 11 ஆம் தேதி நடிகர் அஜித்குமாரின் ‘துணிவு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அஜித் ரசிகர்கள் பலரும் துணிவு திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். 

    இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துணிவு பட பாணியில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது வங்கி ஊழியர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பி வெளியே வந்து சத்தம் போடவே, அங்குள்ள அந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்தனர். இளைஞரை பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 

    இதையடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞர் திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி சேர்ந்த அணில் ரகுமான் என்பது தெரியவந்தது. 

    தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வாழ்வில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக ‘துணிவு’ போன்ற திரைப்படங்களை பார்த்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார். 

    தள்ளிப்போகும் ஜெயிலர் ரிலீஸ்.. காரணம் பொன்னியின் செல்வனா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....