நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படம், ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுவென்று நடந்து வருகிறது.
ஜெயிலர் திரைப்படம் ஆரம்பிக்கப்படும்போது ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் மட்டுமே நடிகர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால், தற்போதோ ஜெயிலர் திரைப்படத்தில் மேலும் பல முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளனர். அதன்படி, மோகன்லால், சிவ்ராஜ்குமார், சுனில் மற்றும் தமன்னா போன்றோர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் உள்ளனர்.
இதனால், ஜெயிலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகளவில் உள்ளது. வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஏப்ரல் 14-ஆம் தேதி ஜெயிலர் ரிலீஸாகாது என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
திரைப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணி அதிக நாட்களை எடுக்கும் என்றும், மேலும், பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளதாலும் ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
‘உங்கள் ஒளியில்… ‘ – கே.எல்.ராகுலின் மனைவியின் இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரல்!