பெங்களூரில் ஒரு மேம்பாலத்தில் இருந்து ஒருவர் பணக்கட்டுகளை வீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் உள்ள கே.ஆர். சந்தை மேம்பாலத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. போக்குவரத்து நெரிசலை சந்திக்க கூடிய கே. ஆர். சந்தை மேம்பாலத்தில் கோட் போட்ட ஒருவர் கடிகாரத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு நின்றிருந்தார். பைக்கில் வந்ததாக கருதப்படும் அவர் தன் கையில் ஒரு பை வைத்திருந்தார்.
வாகன ஓட்டிகள் சென்றும், வந்தும் கொண்டிருந்தபோது அந்த நபர் திடீரென தன் பையில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்து மேம்பாலத்தின் கீழே வீசினார். கட்டுக்கட்டாக அவர் வைத்திருந்தது 10 ரூபாய் நோட்டுகள்.
மேம்பாலத்தின் கீழே இருந்தவர்கள் திடீரென பணமழை பெய்வதைக் கண்டு திகைக்க, பலர் அந்த 10 ரூபாய் நோட்டுகளை பிடிக்க ஓடினர். எகிறினர். இதனால் அப்பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தன் பையில் இருந்து பணத்தை எடுத்து வீசியவர், பையிலிருந்த பணம் காலியானதும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
#Bengaluru-Crazyyyy-Man showers currency notes from above City Market flyover. Motorists stop to take video. @XpressBengaluru,@NewIndianXpress,@ramupatil_TNIE,@AshwiniMS_TNIE,@BoskyKhanna,@KannadaPrabha,@Lolita_TNIE,@CPBlr pic.twitter.com/8rqZRp3u7J
— Mohammed Yacoob (@yacoobExpress) January 24, 2023
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், அந்த நபர் யாரென்றும் அவர் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மூன்றவாது முறையாக ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்..