Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்கட்டுக்கட்டாக பணத்தை வீசிய மர்ம நபர்.. பணத்தை பிடிக்க ஓடிய மக்கள்!

    கட்டுக்கட்டாக பணத்தை வீசிய மர்ம நபர்.. பணத்தை பிடிக்க ஓடிய மக்கள்!

    பெங்களூரில் ஒரு மேம்பாலத்தில் இருந்து ஒருவர் பணக்கட்டுகளை வீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    பெங்களூரில் உள்ள கே.ஆர். சந்தை மேம்பாலத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. போக்குவரத்து நெரிசலை சந்திக்க கூடிய கே. ஆர். சந்தை மேம்பாலத்தில் கோட் போட்ட ஒருவர் கடிகாரத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு  நின்றிருந்தார். பைக்கில் வந்ததாக கருதப்படும் அவர் தன் கையில் ஒரு பை வைத்திருந்தார். 

    வாகன ஓட்டிகள் சென்றும், வந்தும் கொண்டிருந்தபோது அந்த நபர் திடீரென தன் பையில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்து மேம்பாலத்தின் கீழே வீசினார். கட்டுக்கட்டாக அவர் வைத்திருந்தது 10 ரூபாய் நோட்டுகள். 

    மேம்பாலத்தின் கீழே இருந்தவர்கள் திடீரென பணமழை பெய்வதைக் கண்டு திகைக்க, பலர் அந்த 10 ரூபாய் நோட்டுகளை பிடிக்க ஓடினர். எகிறினர். இதனால் அப்பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தன் பையில் இருந்து பணத்தை எடுத்து வீசியவர், பையிலிருந்த பணம் காலியானதும் அங்கிருந்து சென்றுவிட்டார். 

    இது தொடர்பாக போலீசார் கூறுகையில், அந்த நபர் யாரென்றும் அவர் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மூன்றவாது முறையாக ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....