“என்னால் இருவரில் ஒருவரை கூட விட்டு பிரிய முடியாது” என ஒரே சமயத்தில் இரு திருமணம் செய்த வாலிபர்.
ஜார்கண்ட் மாநிலம், பாண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப் என்பவர். அதே கிராமத்தை சேர்ந்த குசும் லக்ரா என்ற பெண்ணும் சந்தீப்பும் மூன்று ஆண்டு காலமாக திருமணம் செய்துக் கொள்ளாமல் இளைஞர்களின் தற்போது நடைமுறையான லிவிங் டூ கெதர் என்னும் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி இருவருக்கும் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
இதனிடையே, சந்தீப் வேலை காரணமாக மேற்கு வங்காளம் செங்கல் சூளைக்கு சென்றுள்ளார். அங்கு, சுவாதி குமாரி என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
மேலும், வேலை முடிந்து சொந்த ஊர் திரும்பிய சந்தீப்பிற்கும் சுவாதிக்கும் இடையே காதல் பயணம் நீடித்துள்ளது. மேலும் நாளைடைவில் இவர்களது காதல் சந்தீப் மற்றும் குசும் குடும்பத்தினர் வீட்டிற்கும் தெரியவந்துள்ளது. இரு பெண்களும் முதலில் சந்தீப்பிடம் சண்டையிட்டுள்ளனர். பிறகு, சந்தீப் அவர்கள் இருவரையும் சமாதனம் செய்து திருமணம் செய்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனால், குடும்பத்தினரும் அமைதியாக இருந்துள்ளனர்.
ஆனால், ஊர்த்தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதையும் மீறி சந்தீப், இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து திருமணம் செய்துக் கொண்ட சந்தீப் பேசுகையில், “இருவரை திருமணம் செய்வதில் சட்ட சிக்கல்கள் இருந்தாலும் நான் இருவரையும் காதலிக்கிறேன். இருவரில் ஒருவரைக் கூட விட்டு பிரிய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இது பார்ப்பதற்கு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் போல நமக்கு தோன்றலாம். ஆனால், இதில் சிறிய மாற்றம் ஒன்று இருக்கிறது. திரைப்படத்தில் கதாநாயகன் கடைசியில் இரு பெண்களை ஒரே நேரத்தில் காதலிப்பது தவறு என்று பிரிந்துவிடுவார். ஆனால், இங்கு ‘இருவரும் எனக்கு கட்டாயம் வேண்டும்’ என்று ஒரே நேரத்தில் தாலி கட்டியிருக்கிறார் சந்தீப்.
படத்துல விட நெசத்துல நல்லா நடக்குதுய்யா… காத்து வாக்குல ரெண்டு காதல் திருமணம்…
தமிழகத்திற்கு வருகை புரிந்த ஆர்க்டிக் ஸ்குவா: இதுதான் காரணமாம்!