Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்ஸியோமியிடம் இருந்து ரூ.5,551 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை மிரட்டல்!

    ஸியோமியிடம் இருந்து ரூ.5,551 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை மிரட்டல்!

    இந்தியாவின் பிரபல மொபைல் விற்பனை நிறுவனங்களில் ஒன்றுதான் “ஸியோமி” . 2014-ம் ஆண்டு இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கிய ஸியோமி நிறுவனம் 2015-ம் ஆண்டிலிருந்து லாபத் தொகையை சீனாவைச் சேர்ந்த தனது தாய் நிறுவனத்திற்கு அனுப்பத் தொடங்கியது.

    இந்நிலையில், பிப்ரவரி மாதம் முதல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சர்ச்சையில் சிக்கியது ஸியோமி நிறுவனம். கடந்த வாரம் இந்நிறுவனத்தின் இந்திய வங்கிக் கணக்குகளில் ரூ.5,551 கோடி ரூபாயை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை. இது வெளிநாடுகளுக்கு “ராயல்டி” என்ற பேரில் சட்டவிரோதமாக பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    “ராயல்டி என்ற பெயரில் இவ்வளவு பெரிய தொகை, அவர்களின் சீன நிறுவனங்களின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டன. மற்ற இரண்டு நிறுவனங்கள், அதாவது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொடர்பில்லாத இரண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட தொகையும், ஸியோமி குழும நிறுவனங்களின் நன்மைக்காகவே அனுப்பப்பட்டுள்ளன. இந்தியாவில் கிடைத்த வருவாயை ராயல்டி என்ற பெயரில் வெளிநாட்டிற்கு அனுப்பியது முறைகேடானது” என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் ஸியோமி நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளது. ராயல்டியாக அனுப்பப்பட்ட பணம் அனைத்தும் முறையானவை என்று கூறியது. வியாழன் அன்று, ஸியோமி தரப்பின் வாதங்களைக் கேட்டு, வங்கி சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறையின் முடிவை நிறுத்தி வைத்து கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் தங்கள் நிறுவனத்தின் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குனர் குமார் ஜெயின், தற்போதைய தலைமை நிதி அதிகாரி சமீர் பி.எஸ். ராவ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக குற்றம் சாட்டியுள்ளது.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் விரும்பியபடி அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால் “மோசமான விளைவுகள்” சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியதாக் அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

    ஸியோமி நிறுவனத்தின் இந்தப் பகிரங்க குற்றச்சாட்டுக்கு அமலாக்கத் துறை இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தில் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....