Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமகளிர் ஐபிஎல் தொடர்; யார் எவ்வளவு தொகைக்குத் தேர்வானார்கள்?

    மகளிர் ஐபிஎல் தொடர்; யார் எவ்வளவு தொகைக்குத் தேர்வானார்கள்?

    மகளிர் ஐபிஎல் தொடருக்காக நேற்று நடைபெற்ற ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்சமாக ரூ. 3.4 கோடிக்கு ஏலம் போனார். 

    மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பலவித முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஒன்றாக மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டை முன்னெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த ஆண்டு முடிவு செய்தது. 

    இதைத்தொடர்ந்து, மகளிர் ஐபிஎல் தொடர் குறித்த அறிவிப்புகள் வெளியானது. அதன்படி, மகளிர் ஐபிஎல் தொடரில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னௌ ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன.  

    ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் 18 வீராங்கனைகள் சேர்க்கப்படுவர். அதில் 6 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடங்குவர். அதுவே பிளேயிங் லெவனில் ஒரு அணியில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அந்த 5 பேரில் நால்வர் ஐசிசியின் முழுமையான உறுப்பினராக இருக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவர் துணை உறுப்பினர் நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். 

    மேலும், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் 2 ஆட்டங்களில் மோதும் வகையில் 20 லீக் ஆட்டங்கள் விளையாடப்படும். அதன் முடிவில் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெறும். 2 மற்றும் 3-ம் இடம் பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்ட வாய்ப்புக்காக எலிமினேட்டரில் மோதும். 

    இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இந்த முதல் மகளிர் ஐபிஎல் போட்டியானது, வரும் மார்ச் 4 முதல் 26-ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணிகள் தங்களுக்கான வீராங்கனைகளை வாங்குவதற்கான ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது. 

    இதில் இந்திய வீராங்கனை மந்தனாவை ஆர்சிபி அணி அதிகபட்சமாக ரூ. 3.4 கோடிக்கு வாங்கியது. மேலும், ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான முதல் 10 வீராங்கனைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

    அதன்படி, 

    1. மந்தனா (ஆர்சிபி) – ரூ. 3.4 கோடி 

    2.ஆஷ்லி கார்ட்னர் (குஜராத்) – ரூ. 3.2 கோடி 

    3.நாட் சிவர்-பிரண்ட் (மும்பை) ரூ.3.2 கோடி 

    4.தீப்தி சர்மா (லக்னௌ) ரூ.2.6 கோடி 

    5.ஜெமிமா (தில்லி) – ரூ. 2.2 கோடி 

    1. பெத் மூனி (குஜராத்) – ரூ. 2 கோடி 
    2. ஷஃபாலி வர்மா (தில்லி) ரூ. 2 கோடி 
    3. பூஜா வஸ்த்ரகர் (மும்பை) – ரூ. 1.9 கோடி 
    4. ரிச்சா கோஷ் (ஆர்சிபி) – ரூ. 1.9 கோடி 

    10.சோஃபி எக்லஸ்டோன் (லக்னெள) – ரூ. 1.8 கோடி 

    ஹர்மன்ப்ரீத் கௌர் (மும்பை) – ரூ. 1.8 கோடி

    காதலர் தின ஸ்பெஷல் எங்கே? – ரசிகர்களை ஏமாற்றிய அனிருத், விக்னேஷ் சிவன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....