சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்த செல்வி என்ற பெண் திருவெற்றியூரைச் சேர்ந்த ரேவேந்திர குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
நிச்சயத்திற்கு பின்னர் செல்வி தனது சுயரூபத்தை காட்ட தொடங்கி உள்ளார். இதனையடுத்து செல்வி ரேவேந்திர குமாரிடம் பணம் நகை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. செல்வியின் சுயரூபம் தெரிந்தவுடன் ரேவேந்திர குமார் குடும்பத்தினர் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி திருவெற்றியூரில் உள்ள காதலன் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
இந்தநிலையில் நேற்று செல்வி வழக்கம்போல் அவரது காதலர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த ரேவேந்திர குமார் காவல் துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தகவலின் பேரில் அங்குவந்த காவல்துறை அதிகாரிகளுடன் செல்வி தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
மேலும் அதிகாரிகளின் சட்டையை பிடித்து தாக்கி உள்ளார். அவரின் கையை கடித்தும் வைத்து உள்ளார். பின்னர், எப்படியோ ஒருவழியாக காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அட்டகாசம் செய்யும் விஜய் – சீதா ஜோடிக்கு அழகான மூன்று புலிக்குட்டிகள்!