இந்துக்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில், நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னை, வேப்பரி பெரியார் திடலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ.ராசா மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆ.ராசா அன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
இதையும் படிங்க : வேட்டிய மடிச்சு கட்டி… துள்ளி குதித்து கபடி ஆடிய எச்.ராஜா ! பிரதமர் விழாவில் நடந்த சுவாரஸ்யம்
ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் இல்லை. மன்னிப்பு கேட்பது என்பது மனித மாண்பு. நான் மன்னிப்பே கேட்க மாட்டேன் என்றால் அவனை விட முட்டாள், அயோக்கியன் வேறு யாரும் இல்லை.
நான் மன்னிப்பு கேட்க தயார். என்ன மன்னிப்பு கேட்கணும் சொல்லுங்கள். நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதனத்திற்கு எதிரானவர்கள்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.