எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார்? என்ற கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்துள்ளார்.
அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல்களும் வழக்குகளும் நடைபெற்று வரும் இந்த நிலையில், சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்து வருகிறது. மேலும், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், ‘எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்பது சட்டசபை கூடுகையில் தெரியும்’ என நெல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும், ‘எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் ஜனநாயக ரீதியில் முடிவு இருக்கும்’ எனவும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
அதோடு, ‘அதிமுகவில் நடப்பது உள்கட்சி விவகாரம்’ எனவும், ‘அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’ எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தற்போது, சபாநாயகர் அப்பாவு அளித்த இந்த பதில், அதிமுக கட்சியினரிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக நீதி என்பது சலுகை அல்ல, அரசின் கடமை – புதுமைப்பெண் திட்டம் முதல்வர் பேச்சு