தில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், கடந்த சில நாள்களாக தலைநகர் தில்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, தில்லி அரசு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து யோசித்து வந்ததாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில், தில்லி அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மக்கள் கடைப்பிடிக்காததை அடுத்து, தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (District Disaster Management Authority) இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தில்லி அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.