Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விக்ரம் வெளியாகும் அதே நாளில் மீண்டும் வெளியாகும் கேஜிஎஃப்! - கொளுத்துங்க வெடிய...

    விக்ரம் வெளியாகும் அதே நாளில் மீண்டும் வெளியாகும் கேஜிஎஃப்! – கொளுத்துங்க வெடிய…

    கேஜிஎஃப் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகி இந்தியா முழுவதும் மிரட்டி எடுத்தது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. வெகுஜன மக்களுக்கு கேஜிஎஃப் கொடுத்த உணர்வு என்பது எழுத்தில் அடங்காதவை. ஆம்! கேஜிஎஃப் திரைப்படம் என்பது வெறுமனே இளைஞர்களை மட்டும் குதூகலப்படுத்தாமல், சிறுவர்களிடத்தில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை அனைவரையும் குதூகலப்படுத்தியது.

    அதன் விளைவுதான், கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் 1000 கோடி எனும் பிரம்மாண்ட வசூல். இன்னுமே கேஜிஎஃப் திரைப்படத்தின் வசூல் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. தென்னிந்திய சினிமாவை மேலும் ஒருபடி முன்னேற்றியது; இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவை முன்னிறுத்தியது, கேஜிஎஃப்.

    அம்மா எனும் எமொஷனை வைத்து கேஜிஎஃப் செய்த சாகசங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. மேலும், கேஜிஎஃப் திரைப்படம் நேரடியாக நமது கோலிவுட்டிற்கு பெரும் சவாலையும் தந்துள்ளது. அந்த சவாலை தற்போது எதிர்கொள்ளும் திரைப்படமாக இருப்பது, விக்ரம்தான்!

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான், விக்ரம். இத்திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஆகச்சிறந்த நடிகர்களாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தினாலும் விக்ரம் திரைப்படத்தின் மீது மக்களிடத்தில் ஆகப்பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. 

    1986 ஆம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தை முன்னிறுத்தி தற்போது வெளியாக இருக்கும் விக்ரம உருவாகியுள்ளது. மற்றபடி இரு விக்ரம் திரைப்படத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றே இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    விக்ரம் திரைப்படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் சூர்யா அவர்கள், கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். இதனால் விக்ரம் திரைப்படத்தின் மீது மேலும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

    கடந்த சில வருடங்களாக இல்லாத அளவிற்கு கமல்ஹாசன் அவர்கள் விக்ரம் திரைப்படத்திற்கான புரோமஷன்களில் ஈடுபட்டுள்ளார். இதனால், விக்ரம் திரைப்படத்தின் மீது இந்திய அளவில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

    பல்வேறு வகையான எதிர்ப்பார்ப்புகளை தன்னுள் அடக்கியுள்ள, விக்ரம் திரைப்படமானது வருகிற ஜீன் மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே நாளில் மாபெரும் வெற்றியடைந்த கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது ஓடிடி-யில் வெளியாக உள்ளது. 

    விக்ரம் திரையரங்குகளிலும், கேஜிஎஃப் ஓடிடி தளத்திலும் மிக சிறப்பான வரவேற்பை பெற்றுவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    விக்ரம் திரைப்படம் விடிவெள்ளியா? விழுந்த இடியா? – எதிர்ப்பார்ப்பில் திரையுலகம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....