Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தளபதி விஜயின் துள்ளல் குரலில் "ஜாலியோ ஜிம்கானா" எப்படி இருக்கு?

    தளபதி விஜயின் துள்ளல் குரலில் “ஜாலியோ ஜிம்கானா” எப்படி இருக்கு?

    தளபதி விஜய் நடிப்பில் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் திரைப்படம்தான் பீஸ்ட். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்திற்குள்ள எதிர்ப்பார்ப்பு என்பது கொஞ்சம் நெஞ்சம் அல்ல! திருவிழா நாள் எப்போது வரும் என்று கடந்த ஆறு மாத காலமாக காத்திருகின்றனர், விஜய் ரசிகர்கள்.

    காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டங்களை தரும் விதமாகவே இருக்கிறது. படத்தின் பெயர் அறிவிப்பாகட்டும் இதுவரை வெளிவந்த படத்தின் போஸ்டர்கள் ஆகட்டும் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதி வெளிவந்த அரபிக்குத்து பாடல் வெளியானதில் இருந்து இன்றுவரை தொடர்ந்து டிரெண்ட்டில் இருந்து வருகிறது. சுட்டீஸ் முதல் திரைப்பிரபலங்கள் வரை பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி அதை இணையத்தில் பதிவேற்றி வந்த வண்ணம் உள்ளனர்.

    இன்னும் அரபிக்குத்து பாடலின் டிரெண்டே குறையாத நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து அடுத்த பாடல் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி, ஜாலியான பாலசிரியர் கு. கார்த்திக் அவர்களின் வரியில் தளபதி விஜய் அவர்கள் ஜாலியாக பாடி வெளிவந்துள்ள பாடல்தான் ஜாலியோ ஜிம்கானா. பொதுவாகவே விஜய் அவர்களின் குரலில் வெளிவரும் பாடல்களில் ஜாலியான துள்ளல்கள் இருப்பதை நம்மால் அவ்வபோது உணர இயலும். அப்படியான உணர்வை இந்த ஜாலியோ ஜிம்கானா பாடல் தந்துள்ளது.

    ராவம்மா ஏ ராவம்மா

    ஜாலியோ ஜிம்கானா

    ராசம்மா ஏ ராசம்மா

    கேட்டுக்க ஏ கானா !

    ராவம்மா ஏ ராவம்மா

    ஜாலியோ ஜிம்கானா

     

    ராசம்மா ஏ ராசம்மா

    சொன்னது சர்தானா ? 

    என பாடல் வரிகளின் மூலம் விஜய் அவர்கள் கேட்க, ஆம், சரிதான்! என்று சொல்ல வைத்திருக்கிறது, ஜாலியோ ஜிம்கானா. 

    வெறுமனே மகிழ்வை மட்டும் கொண்டில்லாமல் வாழ்வில் எது நடந்தாலும் “பார்த்துக்கலாம்” என்ற பாணியையும் உடையதாகவே இருக்கிறது, இப்பாடல். விஜய் எப்படி இவ்வளவு துள்ளலாக இருக்கிறார் என்று வியப்பாகத்தான் இருக்கிறது. அனிருத், பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்களும் ஜாலியோ ஜிம்கானா பாடலில் ஜாலியோ ஜாலி செய்துள்ளனர். பூஜா ஹேக்தேவும் தான் வரும் இடங்களில் கலக்கி இருக்கிறார்.

    பாடலை பார்க்கவே மிகவும் வண்ணமயமாக இருக்க, பாடலில் வரும் கதாப்பாத்திரமங்களும் அவ்வாறே இருப்பது பாடலின் நோக்கத்தை ரசிகர்களிடம் கடத்த உதவி செய்கிறது. பாடலின் நோக்கம் என்ன என்று கேள்வி எழும்பினால் அதற்கு பதில் பாடலின் தலைப்பான ஜாலியோ ஜிம்கானா-விலே இருக்கிறது.

    நம்மை கூறுபோடும் வாழ்விலே 

    ஜாலியோ ஜிம்கானா முக்கியம்லே

     ஜாலியோ ஜிம்கானாக

    வாங்க கேட்போம் 

    ஜாலியோ ஜிம்கானா

    என்ற உணர்வைத் தந்துள்ளது, தளபதி விஜய் அவர்கள் பாடி அனிருத் அவர்கள் இசையமைத்த ஜாலியோ ஜிம்கானா. 

    பாடலைக் காண : https://www.youtube.com/watch?v=jmwU1iAC-IE

    இதையும் படிங்க ; இந்த விஜய் பாடல் உங்களுக்கு தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....