Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் வாரிசு திரைப்படத்தை கைப்பற்றியதா ரெட் ஜெயண்ட்ஸ் - வெளிவந்த அறிவிப்பு..

    விஜய்யின் வாரிசு திரைப்படத்தை கைப்பற்றியதா ரெட் ஜெயண்ட்ஸ் – வெளிவந்த அறிவிப்பு..

    வாரிசு படத்தை தமிழ்நாட்டில் யார் யார் வெளியிடுகிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் வருகிற பொங்கல் திருநாளன்று வெளியாகவுள்ளது. இரு படத்துக்குமிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. 

    இப்போட்டியில், எந்த திரைப்படத்திற்கு அதிகம் ஒதுக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு திரைப்படத்திற்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. 

    இதன்பின்பு, சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ “அஜித்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய்தான் நம்பர்.1 இடத்தில் இருக்கிறார். ஆனால், வாரிசு படத்திற்கு குறைவான திரைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் குறித்துப் பேசப்போகிறேன்’ என நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோ வைரல் ஆனது. 

    இந்நிலையில், தற்போது வாரிசு படத்தை தமிழ்நாட்டில் யார் யார் வெளியிடுகிறார்கள் என்று வாரிசு திரைப்படத்தின் தமிழக வெளியீடு உரிமம் பெற்றுள்ள 7 ஸ்கீரின் ஸ்டூடியோ தெரிவித்துள்ளது. 

    இதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென ஆற்காடு பகுதிகளில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறதென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ‘விஜய், அஜித் என வித்தியாசம் பார்க்கமாட்டோம்’ – திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....