Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வந்த அப்டேட் - விஜய் வருவாரா?

    வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வந்த அப்டேட் – விஜய் வருவாரா?

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளிவந்துள்ளது. 

    இந்திய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். இவருக்கென்று பெரும் ரசிக பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர் ‘வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரிக்கிறார். 

    வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, படத்தின் அப்டேட்டுகள் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். 

    இச்சூழலில்தான், தீபாவளியை முன்னிட்டு வாரிசு திரைப்பட பாடல் வெளிவரும் என்று தகவல் வெளியானது. ஆனால், தீபாவளி அன்று பாடல்கள் எதுவும் வெளியாகாமல், வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்தன. வெளிவந்த போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இருப்பினும், திரைப்படத்தின் அப்டேட் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேட்ட வண்ணம் இருந்தனர். இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் பாடல் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. தமன் இசையில் உருவாகியுள்ள ரஞ்சிதமே எனத் தொடங்கும் இப்பாடலை விஜய் பாடியிருக்கிறார். இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். விஜய் பாடி ஆடிய விதத்தால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நாளை முழுப்பாடலும் வெளியாகவுள்ளதால், பாடலை கேட்க காண ரசிகர்கள் ஆர்வமாகவுள்ளனர்.

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 24-ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விழாவில் நடிகர் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்துக்கொள்ள உள்ளனர்.

    இதையும் படிங்க: மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க போகிறாரா விஜய் சேதுபதி? அதுவும் இவர் இயக்கத்திலா? – ‘பலே பலே’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....