Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வில்லனாக புதிய பரிமாணத்தில் வைகை புயல் வடிவேலு; யாருக்காக தெரியுமா?

    வில்லனாக புதிய பரிமாணத்தில் வைகை புயல் வடிவேலு; யாருக்காக தெரியுமா?

    நடிகர் வடிவேலு முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    நகைச்சுவை என்றால் வடிவேலு என்று சொல்லும் அளவிற்கு இவரின் நடிப்பு திறமை பலராலும் பாராட்டைப்பெற்றது. அதனாலேயே இவருக்கு ‘வைகை புயல்’ என்று பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

    பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்றும் நடித்து மக்கள் மனதில் இன்றளவும் நின்று வருபவர் நடிகர் வடிவேலு. இவருக்கென தனி ஸ்டைலில் ரசிகர்கள் இவரைக் கொண்டாடி வருகின்றனர். 

    ஆரம்பக் காலங்களில், இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும், 2011 ஆம் ஆண்டுக்கு பின் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். 

    இந்நிலையில் தற்போது அவர், முழு வேகத்துடன் திரைப்படங்களில் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    இதனிடையே இவர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தில்லுக்கு துட்டு திரைப்படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 

    அப்படி உருவாகும் இந்தத் திரைப்படம் காமெடி கலந்ததாக இருக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்கடி20 உலகக் கோப்பை; அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....