கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, அவருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுமென உத்தரகாண்ட் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர், ரிஷப் பந்த். இவர் நேற்று ரூர்க்கியில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் டெல்லி சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ரிஷப் பந்தின் கார், உத்தரகாண்ட் மாநிலம் ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் விபத்துக்குள்ளானது. கார் டிவைடரில் மோதியதில் தீப்பிடித்ததுள்ளது. விபத்து நேர்ந்ததும் பந்த் தாமாக முயன்று கண்ணாடியை உடைத்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
மேலும், ரிஷப் பந்த் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படி, ரிஷப் பந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அவரின் தலையிலும், காலிலும் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தேவை என்றால் ஏர் ஆம்புலன்ஸ் வசதியும் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்த மணற்சிற்பம்; பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்