துருக்கியில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6.4 அலகுகளாகப் பதிவானது.
துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம், துருக்கி மற்றும் சிரியாவில் பல்வேறு அசம்பாவிதங்களை நிகழ்த்தி வருகிறது. இதுவரையில், சுமார் 46 ஆயிரத்திற்கு அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், துருக்கியில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6.4 அலகுகளாகப் பதிவானது. இரு வாரங்களுக்கு முன்னர் அதிபயங்கர நிலநடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்த ஹாடாய் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும், இந்த நிலநடுக்கம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், அங்குள்ள நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தேவைப்படும் கூடுதல் உதவிகளை செய்துத் தரவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நின்ற பேருந்தின் மீது மோதிய மற்றொரு பேருந்து; ஓட்டுநர், நடத்துநர் பலி