Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிமதுபாட்டில்கள் பதுக்கல்; கையும் களவுமாய் சிக்கிய இருவர்..

    மதுபாட்டில்கள் பதுக்கல்; கையும் களவுமாய் சிக்கிய இருவர்..

    புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அதிக விலையில் விற்க மதுபாட்டில்களை 2 அட்டைபெட்டிகளில் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர்  தீபிகா உத்தரவின் பேரில் புதுச்சேரி கிழக்கு காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங், மேற்பார்வையில், உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரத் பாபுஜி, உத்தரவு படி உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் தலைமை  காவலர் சிவசுப்பிரமணியன்  ஆகிய இருவரும் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் மேற்கொண்டனர்.  

    அப்போது அய்யனார் கோவில் தெருவில் சந்தேகிக்கும்படி  இரண்டு அட்டை பெட்டியுடன் நின்றிருந்த இரு நபர்களை பிடித்து  விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த அட்டைபெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திருப்பத்தூரை சேர்ந்த சதீஷ், தர்ம்புரியை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பது தெரியவந்தது. 

    மேலும், அவர்கள் சுற்றுலா பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் அதிக விலைக்கு விற்பதற்காக நெப்போலியன் 750 ml – 18, கிரீன் நெப்போலியன் – 6 என மொத்தம் 24  மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    முன்பற்கள் காரணமாக பறிபோன அரசு வேலை; கேரளாவில் எழுந்த விவாதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....