Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் 3-வது நாளாக 20 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா தொற்று

    இந்தியாவில் 3-வது நாளாக 20 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

    சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக  20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,37,30,071 ஆக அதிகரித்துள்ளது. 

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,25,660 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,301 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,63,651 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,40,760 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 22,93,627 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 199.71 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இலங்கை: எரிபொருளுக்காக இரண்டு நாள்கள் காத்திருந்த கிரிக்கெட் வீரர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....