மார்ச் மாதம் நடைபெற்ற டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவெண்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
மார்ச் மாதம் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை இந்த வருடத்திற்கான குரூப் 1 தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஜூலை மாதம் 13,14,15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தேர்வாணையமானது அறிவித்துள்ளது.
தற்போது வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளில் இடம்பெற்றுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும், இது பற்றிய தகவல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் பற்றியோ, நேர்காணல் பற்றிய தகவல்களோ தனிப்பட்ட முறையில் யாருக்கும் செய்திகள் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx என்கிற இணையத்தில் தேர்வர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு கோடிக்கும் மேல் சம்பளம்; சுருட்டிக் கொண்டு ஓடிய ஊழியர்! தேடும் நிறுவனம்!