Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்ஒரு கோடிக்கும் மேல் சம்பளம்; சுருட்டிக் கொண்டு ஓடிய ஊழியர்! தேடும் நிறுவனம்!

    ஒரு கோடிக்கும் மேல் சம்பளம்; சுருட்டிக் கொண்டு ஓடிய ஊழியர்! தேடும் நிறுவனம்!

    சிலி எனும் நாட்டில் நடந்த விநோத நிகழ்வு ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  சிலி நாட்டில் cial என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு, அவரின் சம்பளத்தை விட அதிகமான சம்பளம் அவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 

    அந்த ஊழியருக்கு செலுத்தப்பட்ட, சம்பளத்தின் தொகைதான் தற்போது உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆம், ரூபாய் 43,000 சம்பளம் வாங்கும் அந்த ஊழியருக்கு, மே மாத சம்பளமாக ரூபாய் 1.42 கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த தொகையானது தவறுதலாக அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது. மேலும், இச்சம்பளம் ஆனது அவரின் இயல்பான சம்பளத்தை விட 236 மடங்கு அதிகமானதாகும்.

    தவறை உணர்ந்த cial நிறுவனத்தின் நிர்வாகம், அந்த ஊழியரை தொடர்புக்கொண்டு பேசியபோது, அவர் தவறுதலாக செலுத்தப்பட்ட தொகையை மீண்டும் தருவதாக கூறியுள்ளார். இதனால் நிறுவனமும் அப்பணத்திற்காக காத்திருந்துள்ள்ளது. ஆனால், நிறுவனத்திற்கு கிடைத்தது என்னவோ பெரும் அதிர்ச்சிதான். ஆம், பேச்சு வார்த்தை நடைபெற்ற அடுத்த நாள், அந்த ஊழியர் தனது வேலையை இராஜினமா செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

    Cial நிறுவனம் அவரை தொடர்புக்கொள்ள முயற்சி செய்ததது, ஆனால் அத்தனை முயற்சிகளும் வீணாகிப்போயின. ஊழியரின் தலைமறைவால், அந்நிறுவனமானது செய்வதறியாமல் திகைத்து வந்த நிலையில், தற்போது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை கலந்தாலோசித்து வருகிறது. 

    இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தமிழக மக்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில், ‘உன்ன நம்புனதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ, அத பண்ணிட்ட’, ‘ஓடுற பஸ்ல இருந்து ஒரு ரூபா விழுந்தாலே உருண்டு போய் எடுக்கறவன்டா இந்த சைல்டு சின்னா..இப்போ ஆயிரம் ரூபாய் விழுந்துருக்கு விட்ருவேனா’, ‘லட்டு தேடிக்கிட்டு இருந்தவனுக்கு திருப்பதியே கெடச்சா விடுவானா’ போன்ற வசனங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    மனதை தேற்ற யுவன் பாடிய பாடல்; வாழ்வு என்பது இவ்வளவுதான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....