திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி காணிக்கை கிடைக்க பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் பிரசத்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது திருமலா திருப்பதி திருத்தலம். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எப்போதும் வரும் பக்தர்கள், தரிசன செய்வதும் நேத்திக் கடன் செலுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி காணிக்கை கிடைக்க பெற்றுள்ளது. கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 22.22 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து ரூ.140.34 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.
ஏழுமலையான் கோயிலில் இருக்கும் உண்டியல்களில், பக்தர்கள் காணிக்கை செலுத்துவது இயல்பான ஒன்று. கொரோனா காலக்கட்டத்தில் பெரிதும் கூட்டம் வராத நிலையில் கடந்த ஒரு வருடமாக திருப்பதியில் கூட்டம் அலைமோதுவது குறிப்பிடத்தக்கது.