அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. மேலும் சில முக்கியமான கேள்விகளையும் உயர்நீதிமன்றம் எழுப்பியது.
இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது:
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் எவ்வாறு உரிமை கோரலாம்? அதிமுக அலுவலகத்தில் நடந்த சண்டை என்பது அண்டை வீட்டுக்காரர்கள் இடையிலான பிரச்சனை இல்லை.
தனி நபர்கள் போல இருவரும் அடித்துக் கொள்வதா? ஒரு அரசியல் கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது.
அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கியது தவறில்லை என்று குறிப்பிட்டனர். இதையடுத்து நீங்கள் மீண்டும் சிவில் சூட் போட்டு அலுவலகத்தை மீட்க சட்ட வழிகளை நாடலாமே?
இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவினால், ஒருங்கிணைப்பாளர் பதவி ஓ பன்னீர்செல்வமிடம் இல்லை. அதிமுகவில் அவர் உரிமை கோர முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு சுட்டிக் காட்டியுள்ளதாக பார்க்கப்படுகிறது.