நித்தியானந்தா ஆசிரமம் நடத்திய கைலாசா ஓம் விருதுகள் நிகழ்ச்சியில் திருச்சி சூர்யாவுக்கு ‘கைலாசா தர்மரக்சகா விருது’ வழங்கப்பட்டுள்ளது.
திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும் மக்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன்தான், திருச்சி சூர்யா. இவர் சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவரின் இந்த நகர்வு பல்வேறு விவாதங்களை அரசியல் வட்டாரத்தில் நிகழ்த்தியது.
இந்நிலையில், விஜயதசமி அன்று நித்தியானந்தா ஆசிரமம் நடத்திய கைலாசா ஓம் விருதுகள் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் இந்து மதத்திற்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் இளம் தலைவர் என்று புகழாரம் சூட்டப்பட்டு, திருச்சி சூர்யாவுக்கு ‘கைலாசா தர்மரக்சகா விருது’ வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் பேசிய திருச்சி சூர்யா, நித்தியானந்தா சுவாமிகளின் அருளால்தான் தற்போது பாஜகவில் பணியாற்றும் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார்.
Feeling blessed and happy to receive Kailasa Dharmarakshaka Award from Swamy @SriNithyananda 🙏🏻 Thank u Swamy Ji . Om Namasivayam . Nithyanandham pic.twitter.com/J4n4Ag2JpN
— Trichy Suriya Shiva (@TrichySuriyaBJP) October 6, 2022
மேலும், வீடியோ கால் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் குறும் தொகுப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்பதிவில், ‘கைலாசா தர்மரக்சகா விருது’ பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டு நித்தியானந்தாவிற்கு நன்றி தெரிவித்தார்.