Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சி சிவா மகன் சூர்யாவுக்கு கைலாசவில் விருது அறிவித்த நித்தியானந்தா! எதற்காக தெரியுமா ?

    திருச்சி சிவா மகன் சூர்யாவுக்கு கைலாசவில் விருது அறிவித்த நித்தியானந்தா! எதற்காக தெரியுமா ?

    நித்தியானந்தா ஆசிரமம் நடத்திய கைலாசா ஓம் விருதுகள் நிகழ்ச்சியில் திருச்சி சூர்யாவுக்கு ‘கைலாசா தர்மரக்சகா விருது’ வழங்கப்பட்டுள்ளது. 

    திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும் மக்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன்தான், திருச்சி சூர்யா. இவர் சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவரின் இந்த நகர்வு பல்வேறு விவாதங்களை அரசியல் வட்டாரத்தில் நிகழ்த்தியது. 

    இந்நிலையில், விஜயதசமி அன்று நித்தியானந்தா ஆசிரமம் நடத்திய கைலாசா ஓம் விருதுகள் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் இந்து மதத்திற்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் இளம் தலைவர் என்று புகழாரம் சூட்டப்பட்டு, திருச்சி சூர்யாவுக்கு ‘கைலாசா தர்மரக்சகா விருது’ வழங்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் பேசிய திருச்சி சூர்யா, நித்தியானந்தா சுவாமிகளின் அருளால்தான் தற்போது பாஜகவில் பணியாற்றும் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். 

    மேலும், வீடியோ கால் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் குறும் தொகுப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்பதிவில், ‘கைலாசா தர்மரக்சகா விருது’ பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டு நித்தியானந்தாவிற்கு நன்றி தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....