காஷ்மீரில் இன்று காலை நடத்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து இன்று காலை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சோபியான் மாவட்டம், சைனாபுரா நகரில் முன்ஜா மர்க் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பாதுகாப்பு படையினர் பதுங்கி இருந்தனர். மேலும் அவர்கள் திடீரென துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டனர்.
மேலும் இரு தரப்பினரிடையே வெகு நேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்திருப்பதால், அப்பகுதியில் பாதுகாப்பு படை தேடுதலில் ஈடுபட்டு வருகிறது.
கால்பந்து உலகக் கோப்பையால் கூகுள் படைத்த சாதனை.. சுந்தர் பிச்சை சொன்ன ரகசியம்