மதுரையில் பைக்கில் மோதியதற்காக திட்டியதை அடுத்து, திட்டிய நபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருதாவூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவர் கோழி, ஆடு இறைச்சிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் சமீபத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.
இதையடுத்து, ராஜா முகமது காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். அதில் இதுதொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றினர்.
அந்த சிசிடிவி காட்சி விசாரணை மூலம் திருதாவூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி(25), ஆனந்தன்(30) ஆகிய மூவரும் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
மேலும், 17 வயது சிறுவன் வாக்குமூலம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதில், சில தினம் முன்பு மாலையில் ராஜா முகமது, தனது மனைவியுடன் பள்ளிவாசலுக்கு டூவீலரில் சென்றார். அப்போது எதிரே ஒரே பைக்கில் நாங்கள் வேகமாக வந்தோம். அப்போது தெரியாமல் ராஜா முகம்மதுவின் பைக்கில் மோதிவிட்டோம்.
இதில் ராஜா முகம்மதுவுக்கும், எங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராஜா முகம்மது எங்களை நன்றாகத் திட்டிவிட்டார். இதன்பிறகு அப்பகுதிவாசிகள் சமாதானம் செய்து எங்களை அனுப்பி வைத்தனர். இந்தக் கோபத்தில் தான் அவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு