Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்

    நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்

    நாடு முழுவதும் சுமார் 50 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு நண்பருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்ததில் கொள்ளையர்கள் மாட்டிக்கொண்டனர். 

    கொள்ளை மற்றும் வழிப்பறி குற்றங்களுக்காக லஷ்மண் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் தானே மத்திய சிறைச்சாலையில் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் சிறையில் நண்பர்களாக மாறினர். 

    பிறகு சிறைக்கு வெளியே வந்த இருவரும் மீண்டும் திட்டமிட்டு கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றினர். குறிப்பாக இவர்கள் பராமரிப்பு வேலைகள் நடந்து வரும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கத் தொடங்கினர். 

    கருப்பு துணிகளை அணிந்துகொண்டு கொள்ளையடித்த இவர்கள் ஒரு வீட்டில் இருந்து செல்போனை திருடி உள்ளனர். இப்படி பல கொள்ளை மற்றும் வழிபறிகளில் ஈடுபட்ட இவர்களை காவல்துறையினர் கண்டுப்பிடிப்பதற்கு சிரமப்பட்டனர். 

    இதனிடையே, இவர்கள் கொள்ளையடித்த செல்போனில் புதிய சிம் கார்டு சிக்னல் காட்டுவதை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதை வைத்து ஆய்வு செய்ததில், செல்போனை வைத்திருந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

    அப்போது அந்த நபருக்கு, அவரது நண்பர்கள் செல்போனை பரிசு அளித்ததாக தெரிவித்ததை வைத்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில் அந்த நபருக்கு பரிசு அளித்ததும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட லஷ்மண் மற்றும் விஷ்ணு என தெரியவந்தது. 

    ‘இப்படி ஒரு நிலைமை உங்கள பெத்தவங்களுக்கு வந்தா…. நீங்க இத செய்வீங்களா?’ – சமுத்திரக்கனி படத்தின் டீசர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....