காவலர் ஒருவர் விடுப்பு கேட்டு எழுதிய விண்ணப்பக் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேசம் மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்ரங்கா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்ததும் விடுமுறை கிடைக்காத காரணத்தினால் அந்தக் காவலர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், விடுமுறை கேட்டு கடிதம் ஒன்றை காவல் உதவி கண்காணிப்பாளருக்கு அந்த காவலர் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘ மனைவி என் மீது கோபமாக இருக்கிறாள். நான் போன் செய்தால் கூட என்னிடம் பேசுவதில்லை. அவர் தனது தாயிடம் போனை கொடுத்து விடுகிறார்.’ என்று தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும், ‘தனது மருமகனின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வருவேன் என்று தனது மனைவிக்கு உறுதியளித்துள்ளேன். விடுமுறை கிடைக்கவில்லையென்றால் வீட்டிற்கு செல்ல முடியாது.’ என்றும் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த விடுப்பு விண்ணப்பக் கடிதத்தை உதவி கண்காணிப்பாளர் படித்தார். இதன் பின்பு, காவலருக்கு ஜனவரி 10 முதல் 10 நாள்களுக்கு அவருக்கு சாதாரண விடுப்பு வழங்கி உள்ளார். மேலும், தற்போது இந்தக் கடிதமானது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
கோல்டன் குளோபை வென்ற ஆர்ஆர்ஆர்.. பாராட்டை பொழிந்த இளையராஜா, ரஹ்மான்..