Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாதல் திருமணத்துக்கு பெற்றோர் செய்த கொடூர காரியம் என்ன தெரியுமா?

    காதல் திருமணத்துக்கு பெற்றோர் செய்த கொடூர காரியம் என்ன தெரியுமா?

    திருமணம் செய்து கொண்ட மகளை கடத்திக் கொண்டு வந்து அவரது தலைமுடியை மொட்டை அடித்து விரட்டி விட்ட பெற்றோர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஜெகத்தியாலா மாவட்டம், பாலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவ். இவர் பாலபள்ளி கிராமத்துக்கு அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் அட்சதா என்ற பெண்ணை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

    இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு தனி வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில், மகள் தங்களுக்கு விருப்பம் இல்லாத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதன் காரணமாக, அட்சதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    இரண்டு கார்களில் சென்ற அட்சதாவின் உறவினர்கள் அவர்கள் தங்கியிருந்த  வீட்டிற்கு சென்று, மிரட்டினர் மேலும் அட்சதாவை மட்டும் காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.அட்சதாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்ற உறவினர்கள் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து குடிக்க வைத்தனர்.

    பிறகு அவரது தலைமுடியை முழுவதுமாக மொட்டை அடித்தனர். இதையடுத்து அட்சதாவை அவமானப்படுத்தும் விதமாக, திரும்பவும் அவரது கணவர் வீட்டிற்கு விரட்டி விட்டதாக அட்சதா காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து, அட்சதா அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கடத்தி சென்ற உறவினர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்கசென்னையில் தீவிரமடைகிறதா ‘மெட்ராஸ்-ஐ’? நாம் செய்ய வேண்டியது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....