பொங்கலை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு அரசின் இலச்சினை இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டுக்கான முதலாவது சட்டமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை ஆளுநர் பயன்படுத்தாதது பெரிய அளவில் சர்ச்சையானது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படவுள்ளது.
இந்த தேநீர் விருந்துக்கு, கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட அழைப்பிதழில், தமிழக அரசின் இலச்சினையும், தமிழ்நாடு ஆளுநர் எனவும் அச்சடிக்கப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை இரண்டுமே தவிர்க்கப்பட்டது. இதனால் ஆளுநர் மட்டும் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சிக்கு இடையேயான மோதல் போக்கானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டிரைலர் விழாவில் கண்ணீர் விட்ட சமந்தா; காதல் நிலையானது என பேச்சு..