Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்டிரைலர் விழாவில் கண்ணீர் விட்ட சமந்தா; காதல் நிலையானது என பேச்சு..

    டிரைலர் விழாவில் கண்ணீர் விட்ட சமந்தா; காதல் நிலையானது என பேச்சு..

    சாகுந்தலம் படத்தைப் பார்த்துவிட்டு, குணசேகர் காலில் விழுந்துவிட்டேன் என டிரைலர் வெளியீட்டு விழாவில் சமந்தா பேசியுள்ளார். 

    நடிகை சமந்தாவின் நடிப்பில் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. நேரடி தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி  உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 

    இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, அதற்கான சிகிச்சைகளை பெற்று வரும் நிலையில், இந்த விழாவில் அவர் கலந்துக்கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த விழாவில் நடிகை சமந்தா கலந்துக்கொண்டார். 

    இதைத்தொடர்ந்து, டிரைலர் வெளியீடும் முன்பு பேசிய சாகுந்தலம் திரைப்படத்தின் இயக்குநர் குணசேகர், இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ, சமந்தா என பாராட்டிப் பேசினார். அப்போது, அவர் பேச்சைக் கேட்டதும் நடிகை சமந்தா கண்ணீர் விட்டார்.

    இதன்பின்னர், சமந்தா பேசினார். அப்போது, “வாழ்வில் பல போராட்டங்களைச் சந்தித்துள்ளேன். ஆனால், நான் சினிமா மீது வைத்துள்ள காதலும், சினிமா என் மீது வைத்துள்ள காதலும் நிலையானது. ‘சாகுந்தலம்’ மூலம் இந்தக் காதல் இன்னும் வளரும் என்று நினைக்கிறேன். “ என்று தெரிவித்தார். 

    மேலும், சாகுந்தலம் படத்தைப் பார்த்துவிட்டு, குணசேகர் காலில் விழுந்துவிட்டேன். நான் அடைந்த அதே உணர்வுகளை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அனுபவிப்பார்கள். என்று சமந்தா தெரிவித்துள்ளார். 

    இந்தியா vs இலங்கை; மூத்த வீரர்கள் கைகொடுப்பார்களா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....