இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இலங்கை அணி விளையாடி வருகிறது.
இதில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டியின் மூலம் ஓய்வில் இருந்த அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் மீண்டும் களத்திற்கு வருகின்றனர். அதேநேரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பும்ராவிற்கு உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்காக இந்தத் தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் ஒருமுறை கூட இந்திய மண்ணில் இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியதில்லை. இதை முறியடிக்கும் வகையில் இலங்கை அணி இன்று களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றையப் போட்டியானது கவுகாத்தி மைதானத்தில் இன்று 1.30 மணியளவில் துவங்க உள்ளது.
இந்திய அணி வீரர்கள்;
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (வி.கே.), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், இஷான் சிங், அர்ஷ்தீப், உம்ரான் மாலிக்.
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; உருவான மிகப்பெரிய அலைகள்