சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 12) முதல் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ‘சர்வதேச பட்டம் விடும் திருவிழா’ நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மூலமாக தமிழகத்திற்கு உலகளவில் பெருமை தேடித் தந்த மாமல்லபுரத்தில், தற்போது சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில், வெளிநாடுகளில் இருந்து 4 குழுவினரும், இந்தியாவில் இருந்து 6 குழுவினரும் கலந்து கொள்கின்றனர்.
இத்திருவிழாவில், கலந்து கொள்ள பார்வையாளர்களுக்கு என சிறப்பான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்ச்சிக்கு https://www.tnikf.com/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu International Kite Festival-2022 in Mahabalipuram || Tamil Nadu Tourism https://t.co/SR2PPToQuL
— Tamil Nadu Tourism (@tntourismoffcl) August 13, 2022