Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்வரும் சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிட்டு வெற்றி பெற பாடுபட வேண்டும்; முத்தமிழ்...

    வரும் சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிட்டு வெற்றி பெற பாடுபட வேண்டும்; முத்தமிழ் செல்வன்

    புதுச்சேரி மாநிலத்தில் இந்திய ஜனநாயக கட்சி நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெறவும் இளைஞர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற பாடுபட வேண்டுமென புதுச்சேரி மாநில இந்திய ஜனநாயக கட்சியின் கலந்துரையாட கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் நியமித்து இந்திய ஜனநாயக கட்சி விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வன் கூறினார்.

    புதுச்சேரி மாநில இந்திய ஜனநாயக கட்சியின் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள கணேஷ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய ஜனநாயக கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக இந்திய ஜனநாயக கட்சியின் மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    அதை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய பொறுப்பாளர்களையும் அறிவித்தார். அதன்படி புதுச்சேரி மாநில இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாணவரணி செயலாளராக செந்தில்குமாரையும், துணைச் செயலாளராக அபிமன்னன், மாநில தொழிற்சங்க செயலாளராக சிவராமன் ஆகியோரை நியமித்து வாழ்த்து கூறினார்.

    அப்போது பேசிய அவர் புதுச்சேரியில் இந்திய ஜனநாயக கட்சி சிறப்பான வளர்ச்சியை கண்டு வருவதாகவும், தற்போது புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மேலும் கட்சியை பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியவர். இனிமேல் புதுச்சேரி மாநிலத்தில் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செய்ய கட்சி தலைமை தயாராக உள்ளதாகவும், எனவே கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என கூறினார்.

    மேலும் இளைஞர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலும் ஏராளமான இளைஞர்கள் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு உள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் தொகுதி வாரியாக புதிய பொருப்பாளர்களை நியமிக்க வேண்டும் என கூறினார்.

    விழாவில் புதுச்சேரி மாநில இந்திய ஜனக கட்சி கொள்கைபரப்பு செயலாளர் தட்சிணாமூர்த்தி, மாநில பொருளாளர் தியாகு, மாநில இளைஞர் அணி தலைவர் தியாகு உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....