தனது ரசிகர் ஒருவரால் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை, ட்விட்டர் முகப்பு படமாக விஜய் வைத்துள்ளார்.
ரசிகர்களால் தளபதி என்றழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துவருகிறார். இவருக்கென்று, இவரைக் கொண்டாட ஒரு ரசிக கூட்டமே உள்ளதென்பதை இந்திய அளவில் பலரும் அறிவர். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், ரசிகர்கள் சற்றே சோர்ந்திருந்தனர். இந்த சோர்வை போக்கும் வகையில் வாரிசு திரைப்படம் இருக்குமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் உள்ளது.
இயக்குநர் வம்சி இயக்க, தில் ராஜூ வாரிசு திரைப்படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, ஷியாம், சரத்குமார், சினேகா, சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. மேலும், விஜய்க்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் ராஷ்மிக மந்தனா நடித்து வருகிறார். தமன் வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் நேருக்கு நேராக மோதவுள்ள விஜய் -அஜித்..!
வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருமென்று சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இச்செய்தியை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடிய நிலையில் உள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு புகைப்படத்தை மாற்றியமைத்துள்ளார்.
This Day i can’t forget in my life ! 😭😭❤❤❤
anna setted my Art as DP @actorvijay 🥺❤
.#ThalapathyVijay𓃵 pic.twitter.com/iXznX0W4F1— Kajendra Krs (@kajendrakrs) October 28, 2022
மேலும், விஜய் வைத்துள்ள முகப்பு படமானது அவரது ரசிகர் ஒருவரால் எடிட் செய்யப்பட்டதாகும். தற்போது அந்த ரசிகர் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் உள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்த நாளை என்னால் மறக்க முடியாது, அண்ணன் நான் தயார் செய்த புகைப்படத்தை முகப்பு படமாக வைத்துள்ளார்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… டிசம்பரில் ‘தளபதி 67’ – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்