Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் நேருக்கு நேராக மோதவுள்ள விஜய் -அஜித்..!

    ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் நேருக்கு நேராக மோதவுள்ள விஜய் -அஜித்..!

    வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் பொங்கலன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. 

    விஜய் – அஜித்குமார் இருவரும் தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திரங்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இருவரின் திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும் நாள் திருவிழாவாக மாறிவிடுகிறது. இவர்கள் இருவரின் திரைப்படமும் வெவ்வேறு நாளில் தனித்தனியாக வெளியாகும் நாளே திருவிழா கோலம் புகும் என்றால், இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானால் அது இன்னும் ரசிகர்களுக்கு திருவிழாக்களின் திருவிழாவாக மாறிவிடும் . 

    தற்போது, வாரிசு என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க, தில் ராஜூ தயாரிக்கிறார். அதேபோல, அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த இரு திரைப்படங்களும் 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதன்மூலம், 11-வது முறையாக இருவரின் திரைப்படமும் நேருக்கு நேர் வெளியாகவுள்ளது. முன்னதாக, கோயமுத்தூர் மாப்பிள்ளை மற்றும் வான்மதி 1996 ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், பூவே உனக்காக மற்றும் கல்லூரி வாசல் 1996-ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பிப்ரவரி மாதமும், காதலுக்கு மரியாதை மற்றும் ரெட்டை ஜடை வயசு 1997-ம் ஆண்டும், துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் உன்னைத் தேடி 1999-ம் ஆண்டும், குஷி மற்றும் உன்னைக் கொடு என்னைத் தருவேன் 2000-ம் ஆண்டும், ஃபிரண்ட்ஸ் மற்றும் தீனா 2001-ம் ஆண்டும், பகவதி மற்றும் வில்லன் 2002-ம் ஆண்டும், திருமலை மற்றும் ஆஞ்சநேயா 2003-ம் ஆண்டும், ஆதி மற்றும் பரமசிவன் 2006-ம் ஆண்டும், இறுதியாக 10வது முறை ஜில்லா மற்றும் வீரம் 2014-ம் ஆண்டும் வெளியாகியது. 

    இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் திரையுலகின் இருபெரும் நட்சத்திரங்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாவது ,அவர்களது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும்,குஷியையும் ஏற்படுத்தியுள்ளது.

    அதேபோல்  வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் மட்டுமன்று, பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படமும் பொங்கலன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வருகிற பொங்கல் தென்னிந்திய  திரையுலகத்திற்கு தீபாவளியாக இருக்குமென எதிர்பாரக்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....