இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனது ஃபார்ம் குறித்து மனம் திறந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி தொடங்கிய இருபது ஓவர் உலகக் கோப்பைத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் ஆட்டமாக, இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தற்போது தனது ஃபார்ம் குறித்து மனம் திறந்துள்ளார்.
இது குறித்து ஹார்திக் பாண்டியா கூறியிருப்பதாவது:
நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொண்டு அணியில் மீண்டும் சிறப்பான பங்களிப்பை கொடுக்க நிறைய உழைக்க வேண்டியிருந்தது. இது என்னுடைய குடும்ப உறுப்பினர்களால் சாத்தியமானது. எனக்கு எனது குடும்பத்தில் அமைதியான சூழல் இருந்ததால்தான், நான் எனது விளையாட்டில் கவனம் செலுத்த முடிந்தது.
நல்ல நாட்கள் மற்றும் மோசமான நாட்களை என இரண்டு வகையையுமே நான் கடந்து வந்துள்ளேன். ஆனால், என்னுடைய கடின உழைப்பு எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. அந்த நம்பிக்கை எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தார்கள். அதனால், என்னைச் சுற்றி நேர்மறையான விஷயங்கள் நிறைந்திருந்தன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மேற்கிந்திய தீவுகள் அணியை வெளியனுப்பிய அயர்லாந்து….இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!