இருபது ஓவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை அயர்லாந்து அணி 9-விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவில் 2022-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தகுதிச்சுற்று போட்டியின் 11-வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதின. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது. அடுத்து விளையாடிய அயர்லாந்து அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 150 ரன்கள் சேர்த்து, இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 2 முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை தகுதிச் சுற்று ஆட்டத்திலேயே வெளியேற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியிருப்பது, அந்த அணியின் ரசிகர்களை மட்டுமல்லாமல், கிரிக்கெட் ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.