இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் இருபது ஓவர் பேட்டிங் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் அரைசதம் விளாசி அசத்தினார்.
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் சதம் அடித்து பலரது பாராட்டுக்கும் உள்ளானார். அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற்ற போட்டியில் 31 வயதான சூர்யகுமார் யாதவ் 76 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச இருபது ஓவர் பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் உள்ளார்.
இதையும் படிங்க: உலக கோப்பையில் பும்ரா இல்லையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..