இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து காயம் காரணமாக பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களுள் ஒருவர், பும்ரா இவருக்கு வயது 28. சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் பல ஆட்டங்களில் பும்ரா விளையாடவில்லை .
இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் இடம் பெற்றிருந்தார் பும்ரா. இருப்பினும் ஆடும் லெவனில் இவர் இடம் பெறவில்லை. இதனால், ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்தன.
இந்நிலையில் சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, அதிகாரபூர்வத் தகவல் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும், இந்தத் தகவல் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இந்திய அணி இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம் என்கிற நிலை நிலவி வந்த நிலையில், அவரால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவைத் தரும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா! 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி…