Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஓடும் ரயிலில் வௌவாலாக மாறி தொங்கிய மாணவர்கள்.. தொடரும் சாகச அட்டூழியங்கள்

    ஓடும் ரயிலில் வௌவாலாக மாறி தொங்கிய மாணவர்கள்.. தொடரும் சாகச அட்டூழியங்கள்

    மாணவர் சிலர் ஓடும் ரயிலின் மீது ஏறி சாகசம் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    சென்னை, கலங்கரை விளக்கத்தில் இருந்து புறப்பட்ட பறக்கும் ரயிலில், கல்லூரி மாணவர்கள் சிலர் தொங்கியபடி சாகசத்தில் ஈடுபட்டனர். 

    வேகமாக சென்று கொண்டிருக்கும் ரயிலில், கல்லூரி மாணவர்கள் சிலர் கானா பாடல்களை பாடிக்கொண்டு தொங்கியவாறு சென்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

    கடந்த வாரம் பட்டாக்கத்தியுடன் மாணவர் ஒருவர் சாகசம் செய்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். தற்போது இந்தக் காணொளி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    என்னதான் காவல்துறையும் அரசும் இப்படி ரயிலிலும் பேருந்து படிக்கட்டிலும் சாகசம் செய்யும் மாணவர்களை கண்டித்து வந்தாலும் ஆங்காங்கே இவ்வாறு மாணவர்கள் விபரீத செயல்களில் ஈடுபட்டுதான் வருகின்றனர். 

    இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: போலி பத்திரப்பதிவினால் நிலத்தை இழந்த வாணிஸ்ரீ ! மீட்டு கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்த ஸ்டாலின்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....