Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'ரஜினியுடனான அந்த ஒரு நிமிட உரையாடல்' நெகிழ்ந்து போன ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் ட்விட்

    ‘ரஜினியுடனான அந்த ஒரு நிமிட உரையாடல்’ நெகிழ்ந்து போன ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் ட்விட்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜெயம்ரவிக்கு கைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் திரைப்படம் உருவாகியுள்ள திரைப்படம்தான், பொன்னியின் செல்வன். 

    இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. 

    தொடக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. அதையடுத்து, வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.

    இதன் தொடர்ந்து, சென்னை நேரு மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற அச்சமயத்தில் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பொன்னியின் செல்வன் பிரபலங்கள் செய்த புரோமஷனும் நன்றாகவே மக்களிடன் சென்று சேர்ந்தது. 

    மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. பல திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் காட்சிகளுக்கு முன்பாக செண்டை மேளங்களுடனும், ரசிகர்களின் ஆடல்பாடலும் இடம்பெற்றிருந்தது. மேலும், திரைப்படம் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

     பல திரைப்பிரபலங்களும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தும், திரைப்படம் குறித்தும் பிரம்மித்தும் வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜெயம்ரவிக்கு கைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இது குறித்து நடிகர் ஜெயம்ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

    அந்த ஒரு நிமிட உரையாடல் எனது நாளையும், வருடத்தையும் மேன்மை உள்ளதாக மாற்றியுள்ளது. மேலும், அந்த உரையாடல் எனது திரை வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை தந்துள்ளது. உங்களது அன்பான வார்த்தைகளுக்கும், குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. நீங்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: திருமண பந்தம் குறித்து அறிவித்த ஹரிஷ் கல்யாண்.. விரைவில் டும் டும் டும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....