நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது திருமண பந்தம் குறித்த முக்கியமான தகவலை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி, பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் பலரையும் கவர்ந்த நடிகர்தான், ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து நல்ல திரைப்படங்களை கொடுத்து வரும் இவருக்கு எப்போது கல்யாணம் என்று பலரும் தொடர்ந்து கேட்டபடியே இருந்தனர்.
இந்நிலையில், ஹரிஷ் கல்யாணே தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். மேலும், விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நர்மதா உதயகுமார் என்பவரை மணமுடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பகிர்ந்துள்ளதாவது;
என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள், அதே போலவே இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள். ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.
இப்போது, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கள் பத்திரிக்கை நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
View this post on Instagram
எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கும் நேரத்தில், இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘லவ் டுடே’ திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிடவுள்ள முன்னணி நடிகர்…உற்சாகத்தில் படக்குழு!