அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்திய ராணுவ விமானி ஒருவர் பலியானார்.
தவாங் அருகே பயணித்து கொண்டிருந்த சீட்டா ஹெலிகாப்டர் இன்று காலை 10:00 மணியளவில் விபத்துக்குள்ளானது. மேலும், இரு விமானிகளும் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த விமானிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இரண்டாவது விமானி மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இதுவரையிலும், விபத்துக்காண காரணம் கண்டறியவில்லை. தற்போது இதற்கான காரணங்களை கண்டறிந்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேசிய கட்சியை தொடங்கிய சந்திரசேகர ராவ்; இப்பபோதே சூடுபிடிக்கிறது 2024 தேர்தல் களம்