தில்லியில் பத்தாம் வகுப்பு மாணவியை உடன்படிக்கும் ஐந்து மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி குருகிராம் பகுதியில் ஓட்டலறை ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவியை அவரது நண்பர்கள் உட்பட ஐந்து பேர் பாலியல் பாலக்காரம் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், கடந்த சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பிறகு அருகில் இருக்கும் பூங்காவுக்கு சென்றதாக அவர்கள் நினைத்ததாகவும் பிறகு, நீண்ட நேரமாக சிறுமி வீடு திரும்பவில்லை என்பதால் பயந்து தேடியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பூங்காவுக்கு சென்று பார்த்தபோது, சிறுமி அங்கு இல்லை என்றும் இரவு முழுவதும் பல இடங்களில் தேடியும் தனது மகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்த புகாரில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் அந்தச் சிறுமி வீட்டின் அருகே இருப்பதை அவர்கள் கண்டுபிடித்ததாகவும், இரவு எங்கு சென்று இருந்தாய் என்று கேட்டதற்கு அந்தச் சிறுமி அழுது கொண்டே தனக்கு நடந்து கொடுமையை சொல்லியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த புகாரில், அந்தச் சிறுமியை இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாகவும் அங்கு ஓட்டல் அருகில் வைத்து ஐந்து பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர்கள் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டியதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா? புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சகம்